RSS

வேர்கள் கதை பேசும்




பள்ளி செல்கையில்
உனைப் பார்த்த ஞாபகம்
சாலையோர
வளாகத்தில் கிளைபரப்பி
கம்பீரமாய் நின்றிருந்தாய்


சிறு விதைதனை
கருவாய் கொண்டு
பல வருட
உழைப்பினிலே
செழித்து தளைத்திருந்தாய்


இயற்கையை நேசித்து
உனை விதைத்த
அந்த முகந்தெரியா நபருக்கு
இருகரம் கூப்பி
நன்றியுரைத்திடவே விரும்புகின்றேன்


செயற்கைத்தனம் குடியேறிவிட்ட
குடியிருப்புகளில்
சிறகடித்துப் பறக்கும்
பல வண்ணப் பட்சிகளுக்கும்
நீ தான் அடைக்கலம்


பொருள் ஈட்டும்
பரபரப்பிலும் கூட
சில நாழிகைகளை, உன்
நிழலில் சுகமாய் கழித்திடுவோரை
நான் பார்த்ததுண்டு


பள்ளிவிட்டு வரும் பொடிசுகள்
கல் கொண்டு வீழ்த்தும்
உன் கனிகள்
இதமாய் பசியாற்றும்
சுவை மிகு அமுதங்கள்


பிடித்தவர்கள் பெயர்தனை
உன் தண்டில்
பதித்திடும் இளமையை
கிராமத்தில் மட்டுமல்ல
நகரத்திலும் காண்கின்றேன்


என் சாலையோர
நண்பனாகிவிட்ட நீ,
காலம் போன போக்கில்
அடிபட்டுப் போனதுதான்
என் துரதிஷ்டம்


ஆம், ஊரெங்கும் வியாபித்த
மனிதனின் நாகரிகப்
படைப்புகள்
இயற்கையினை பட்டும்படாமல்
தோற்கடித்தன


இயற்கை மரித்துப் போய்
செயற்கை காலூன்றிவிட
உன் போன்ற விருட்சங்களின்
ஆயுள்
குறுகித்தான் போனது


சொகுசு வாழ்க்கை
பழகிவிட்ட மானிடர்க்கு
இயற்கை வரமாய்
வேரூன்றிவிட்ட நீ
இனியும் தேவைப்படவில்லை


வானளாவி நின்ற
உன்னை
அவர்கள் வெட்டிச் சாய்த்தபோது
உன் சகாப்தம்
முடிந்ததென்றே எண்ணினர்


ஆனாலும்
அழியாச் சுவடுகளாய்
ஆழப் பதிந்துவிட்ட
உன் வேர்கள்
என்றும் உன் கதை பேசும் !

12 comments:

ஆரபி said...

பிருந்தா... அருமையான ஒரு படைப்பு. மேலும் உங்கள் ஆக்கங்களை எதிர்பார்த்துள்ளேன் :)

vasanth said...

brins, நல்லா இருக்கு... keep it up.

Unknown said...

தங்கள் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி ஆரபி :)

Unknown said...

நன்றி anns !

Anonymous said...

its a pleasure to read ur blog! i feel like spring :)
too good bru! keep it up!

Unknown said...

thanks a bunch 4 ur comment bahi !

Think Why Not said...

மனிதன் அப்பாவியாய் இருந்த போது அளவளாவி ஆதரவளித்த (வ)மரங்களை வெட்டி வீழ்த்தும் சுயநல உலகம்...

அழகான சொற்பதங்களிடையே அழுத்தமான கருத்துக்கள்...

தொடர்ந்தும் எழுதுங்கள்...

Unknown said...

தங்கள் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி Thinks Why Not-Wonders How !

அண்ணாமலையான் said...

இங்கே இதுக்காக சில கட்சியே இருக்கு, என்னத்த சொல்ல?

Unknown said...

மனிதன் என்றேனும் ஒர் நாள் திருந்திடுவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்...

கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

ஆகச்சிறந்த சிந்தனைகள்...!

Unknown said...

நன்றி வசந்த் :)

Post a Comment