RSS

என்றேனும் ஓர்நாள்




விபரங்கள் அறியாமல்
விளைவுகள் புரியாமல்
சிறுபிள்ளைத்தனமாய்
அன்று நான் உரைத்த
பொய்கள்
இன்றுவரை என் நிழலாய்
என்னோடு நிழலாடுகின்றன


மனித வாழ்வினில்
நீக்கமற கலந்துவிட்ட
இப் பொய்கள்
என்னால் மட்டும்
ஜீரணிக்க முடியாமல் போனது
என் துர்பாக்கியமே !


கல்லைத் தின்று
தண்ணீர் குடித்த கதையாய்
உன் பால்முகம் நோக்கி
அன்று பொய் உரைத்ததற்காய்
இன்று வருந்துகின்றேன்


மனம் தெளிந்து இனியேனும்
நிஜத்தோடு நிஜமாய்
என் வாழ்வை
அமைத்திடவே விரும்புகின்றேன் - இருப்பினும்
இப்பூமிதனில்
வேண்டியது கிடைப்பதில்லை
விரும்பியது நடப்பதில்லை
என் பொய்களும் மறைவதற்கில்லை


இதழிலிருந்து வெளிவந்த
வார்த்தைகள்
தவமிருந்து வேண்டினும்
அழிவதற்கில்லை
என்றேனும் ஓர்நாள்
என் பொய்களிலிருந்து - எனக்கு
விடுதலை கிடைக்குமானால் ...