RSS

தொடுவானம் தொலைதூரமில்லை



ஆர்ப்பரிக்கும் கடல்
சொட்டுநீலமாய் வானம்
செங்கொழுந்தாய் கதிரவன்
என் சிந்தை மயங்க
இவை மட்டுமே போதுமாயின


கடற்கரை மணல்தனில்
கால்புதைய நடந்தேன்
தொடுவானில் அவை மூன்றும்
தழுவிக் கொள்ளும்
அழகை ரசித்தபடி


இத்தனை ஜாலம் காட்டும்
தொடுவானம்
சொல்லொண்ணாத் தூரத்தில்
இருப்பது தான்
ஏக்கத்திற்குரிய விடயம்


எண்ணங்களின் இடையே
கரையோரமாய்
மணல்வீடு கட்டிய சிறுவன்
மீது ஏனோ
என் மனம் லயித்தது


மணல் அணைத்து
சிறுவீடு எழுப்பி
அதற்கோர் நடைபாதையும்
அமைத்திருந்தான்
இளையவன்


எண்ணம் நிறைவேறியதில்
புளகாங்கிதம் அடைந்திருந்தவன்
எதிரே தோன்றிய
அலையின் வருகைதனை
சற்றும் எதிர்பார்த்தானில்லை


அலையோடு அலையாய்
அவன் ஆசை வீடும்
கடலின் பசிக்கு
இரையாகிப் போனதுதான்
தாளாத வேதனை


மறுபடியும் முயற்சித்தவனுக்கு
தோல்விகளே
தொடர் கதையாகிப் போய்விட
கழிவிரக்கத்துடன் அவனை
பார்த்தபடி நின்றிருந்தேன்


முன்பு மணல்வீடு
கட்டி அழகுபார்த்தவன்
தன் வியூகம் மாற்றி
இம்முறை எழுப்பியதோ
ஓர் கற்கோட்டை


மணலை வெற்றிகொண்ட
அலையரசனுக்கு
கற்கோட்டைதனை
அசைத்துப் பார்க்க
சக்தியில்லை


வாகை சூடிவிட்ட
பெருமிதத்துடன் சிறியவன்
என்னை நோக்க
பெரியவளாய்,என் முகத்திலும்
புன்சிரிப்பொன்று மலர்ந்தது


என்னை அறியாமலேயே
அக் கணத்தில் என் விழிகள்
வானை வெறித்த போது
என்னுள்ளே உணர்ந்தேன்
‘தொடுவானம்’தொலைதூரமில்லை என !

12 comments:

Unknown said...

still i couldn't believe that our bru has this much talent in writing poems...they are really great...pictures are also very nice...

Unknown said...

thanx alot!
ur feedback makes me to write more n more :)

Anonymous said...

i can see ur own spirit in tht little one!
write more bru! :)

Unknown said...

ya sure chap !
expecting ur writings too

jeevana said...

hey bru...good work,,,
keep t up gal,exceptin mre 4rm u:)

Unknown said...

Thanx jeevana 4 ur valuable comments !

Unknown said...

Tholaivanam toduthoramillai!
Nice heading & picture. Your writing excellent!!!

Unknown said...

Thank u so much athvika !

Muruganandan M.K. said...

நல்ல சிந்தனைகளுக்கு கவிதை வடிவம் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தொடருங்கள். தொடர்வோம்.

Unknown said...

தங்கள் பின்னூட்டலுக்கு மிக்க நன்றி ஐயா :)

அண்ணாமலையான் said...

நம்ம பக்கம் வந்தா ஒரு ஓட்டும் கமெண்டும் இலவசமா போடலாம். வந்தா சந்தோஷம்...

Unknown said...

நிச்சயமாய் அண்ணாமலையான் :)

Post a Comment