RSS

என்றும் நட்புடன்



உன்னிடம் ஓராயிரம் கதைகள் பேசியிருப்பேன்
அவற்றில் அர்த்தமுள்ளவை எத்தனையென
இன்னும் தெரியவில்லை
உனைக்கேலி செய்து சிரித்திருப்பேன்
அவை உனைப் பாதித்ததா
என புரியவில்லை


நீ நகைப்பதற்காய் கவி பாடியிருப்பேன்
அதை ரசித்தாயோ என்னவோ
நான் அறியவில்லை
என் கவலைகளை உன்னிடம் பகிர்ந்திருப்பேன்
எனை சுமையாய் எண்ணினாயோ
அன்று நான் சிந்திக்கவில்லை


இன்முகம் காட்டும் உன்னிடம்
என் கோபம் காட்டியிருப்பேன்
அன்றென்னை வெறுத்தாயோ நண்பனே
நான் அறியவில்லை
இருப்பினும் - என்றும்
என்னுடன் நட்பு பாராட்டும் உன்னை
பிரியேன் எனமட்டும் நான் அறிவேன் !

No comments:

Post a Comment